உள்ளூர் செய்திகள்
பெண்ணுக்கு அரிவாள் வெட்டு; கணவர் கைது
- மதுரை பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
- அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பழைய மார்க்கெட் தெருவைச் சேர்ந்தவர் முத்துகாமாட்சி (வயது 50), டிராக்டர் டிரைவர். இவரது மனைவி செல்வி (47). சம்பவத்தன்று குடும்பத் தகராறு காரணமாக கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த முத்துகாமாட்சி மனைவியை அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் ராமேசுவரம் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து முத்துக்குமாரை கைது செய்தனர்.