கோத்தகிரியில் ரூ.44 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள் அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் ஆய்வு
- பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அமைச்சர் அறிவுறுத்தினார்.
- அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
அரவேணு,
கோத்தகிரி பேரூராட்சியில் ரூ.44 கோடி மதிப்பில் நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றை தமிழக சுற்றுலா அமைச்சர் ராமச்சந்திரன் பார்வையிட்டார்.
திம்பட்டி பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடத்தை அமைச்சர் திறந்து வைத்ததுடன், அங்கு ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமையலறையையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து நடுஹட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கடக்கோடு கிராமத்தைச் சேர்ந்த 35 விவசாயிகளுக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பழ நாற்றங்கால் தொகுப்புகளையும் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சியில் 2022-2023 அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.42.69 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் குடிநீர் பணிகள் மற்றும் 2022-2023 நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.96.20 லட்சம் மதிப்பீட்டில் கார்சிலி முதல் குண்டடா ஜங்ஷன் சாலை வரையிலான தார் சாலை பணிகளையும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். எம்.பி. தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.20 லட்சம் மதிப்பில் மேல் அணையட்டி பகுதி யில் கட்டப்பட்டு வரும் சமுதாயக்கூடம், எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தாந்தநாடு, ஒசஹட்டி பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பில் கட்ட ப்பட்டு வரும் பல்நோக்கு கட்டிட பணிகள் உள்பட மொத்தம் ரூ.44 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
அப்போது மேற்கண்ட பணிகளை விரைவாகவும் தரமாகவும் கட்டி முடித்து விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
இதனை தொடர்ந்து அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என முதல்-அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். இதன்படி மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தேவையான வசதிகள் செய்து தரப்பட்டு வருகின்றன.குறிப்பாக பள்ளி கல்வித்துறை சார்பில் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில் மாணவ, மாணவிகளுக்கு சீருடை, காலணி, விலை இல்லா மடிக்கணினி, புத்தகம், இலவச மிதிவண்டி ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழக அரசு மூலம் நடைபெறும் அனைத்து வளர்ச்சி திட்ட பணிகளையும் ஆய்வு செய்து, விரைவில் பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது குன்னூர் கோட்டாட்சியர் பூஷ்னக்குமார், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராஹிம் ஷா, கோத்தகிரி செயல் அலுவலர் சதாசிவம், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித்,,கோத்தகிரி வட்டார தாசில்தார் கோமதி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜனார்த்தனன் அனிதா. கோத்தகிரி பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி, கோத்தகிரி ஒன்றிய செயலர் நெல்லை கண்ணன், தலைமை செயற் குழு உறுப்பினர் எக்ஸ்போ செந்தில், மாவட்ட பிரதிநிதி போஜன், பொதுக்குழு உறுப்பினர் வீரபத்திரன் ராஜு மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.