உள்ளூர் செய்திகள்

ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.

ராகுல்காந்தி நடைபயணம்: நெல்லையில் இன்று மாலை காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் - ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. அழைப்பு

Published On 2022-08-23 06:59 GMT   |   Update On 2022-08-23 06:59 GMT
  • அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.
  • தொடர்ந்து 150 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டு, சுமார் 3500 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து காஷ்மீரை சென்றடைகிறார்.

நெல்லை:

தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். வருகிற செப்டம்பர் 8-ந்தேதி காலை, கன்னியாகுமரியில் இருந்து தனது நடைபயணத்தை தொடங்குகிறார். செப்டம்பர் 8 முதல் 10-ந்தேதி வரை, 3 நாட்கள் தமிழகத்தில் நடைபயணம் மேற்கொள்கிறார்.

தொடர்ந்து 150 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டு, சுமார் 3500 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து காஷ்மீரை சென்றடைகிறார்.

தமிழகத்தில் ராகுல்காந்தி மேற்கொள்ளும் நடைபயணத்தில் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரசார் கலந்து கொள்வது பற்றிய ஆலோசனை கூட்டம், பாளை மகாராஜா நகரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.

நெல்லை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நாங்குநேரி, ராதாபுரம் மற்றும் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

Tags:    

Similar News