உள்ளூர் செய்திகள்

வெல்லம் கொள்முதல் செய்யப்பட்டது.

பாபநாசத்தில், 7.5 குவின்டால் வெல்லம் கொள்முதல்

Published On 2023-03-19 09:16 GMT   |   Update On 2023-03-19 09:16 GMT
  • 10 கிலோ உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் பங்கு பெற்று கொள்முதல் செய்தது.
  • வாகன செலவு, ஏற்று இறக்கு கூலிகள், நேர விரயம் உள்ளிட்டவை தவிர்க்கப்படுவதாக கூறி விவசாயிகள் மகிழ்ச்சி.

பாபநாசம்:

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் வெல்லம் கொள்முதல் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் தேசிய வேளாண்மை மின்னணு சந்தை திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று வெல்லம் கொள்முதல் செய்யப்பட்டது.

இதன்படி பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் தாட்சாயணி தலைமையிலும், வேளாண்மை உதவி அலுவலர் பாலமுருகன் முன்னிலையிலும் மாகாளிபுரம் கிராமத்தில் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே நேரடியாக சென்று 7.5 குவின்டால் வெல்லம் கொள்முதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.28,750 ஆகும்.

இதில் 10 கிலோ உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் பங்கு பெற்று கொள்முதல் செய்தது.

விவசாயிகளின் இடத்துக்கே சென்று வெல்லம் கொள்முதல் செய்யப்பட்டு பணம் பரிவர்த்தனை செய்யப்படுவதால் வாகனச் செலவு ஏற்று இறக்கு கூலிகள் நேர விரயம் உள்ளிட்டவை தவிர்க்கப்படுவதாக கூறி விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News