உள்ளூர் செய்திகள்
சட்ட விரோதமாக மது விற்றவர் கைது
- சட்ட விரோதமாக மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
- 12 மது பாட்டில்கள் பறிமுதல்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் மேலநெம்மக்கோட்டையை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சண்முகசுந்தரம் (வயது 35)இவர் பாத்தம்பட்டி சாலை அண்ணாநகர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததை பார்த்த தனிப்படை போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 12 மது பாட்டில்கள் பறிமுதல் செய்து ஆலங்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல் ஆய்வாளர் அழகம்மை மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.