உள்ளூர் செய்திகள்
லாட்டரி டிக்கெட் விற்ற 4 பேர் கைது
- லாட்டரி டிக்கெட் விற்ற 4 பேர் கைது செய்தனர்.
- போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
புதுக்கோட்டை:
அறந்தாங்கி நகருக்குட்பட்ட அவுலியாநகர், எல்என்புரம், பாரதிதாசன் நகர் ஆகிய பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற அறந்தாங்கி காவல் உதவி ஆய்வாளர் சிவக்குமார் உள்ளிட்ட போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்த, கான்முகமது (வயது39), ராஜேந்திரன் (53), சம்சுதீன் (42) நாராயணன் (40) ஆகிய 4 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ1200 ரொக்கப்பணம், லாட்டரி சீட்டுகள் மற்றும் நோட்டு பேனா உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.