உள்ளூர் செய்திகள்
- பெண்ணை தாக்கிய வாலிபர் கைதானார்
- தலைமறைவான 2 பேரை ேபாலீசார் தேடிவருகின்றனர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கோவிலூர் நான்கு ரோடு கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சலை (வயது47). மகன் ராஜசேகர். இவரும், கீழகொத்தக்கோட்டை ரா மையா மகன் முருகேசன் (வயது 36 ) ஆகிய இருவரும் நட்பாக பழகி வந்தனர்.
இந்நிலையில் இவர்களுக்குள் முன் விரோதம் இருந்ததாக கூற ப்படுகிறது. இதனால் அஞ்சலை, தனது மகனை முருகேசனுடன் சேர வேண்டாம் என்று கண்டித்ததாக கூறப்ப டுகிறது.
இதனை அறிந்த முருகேசன், தனது நண்பர்களான புதுக்கோட்டைவிடுதியை சேர்ந்த விஜய், வீரமுத்து ஆகியோருடன் சேர்ந்து அஞ்சலையை அடித்தும் தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர். இச்சசம்பவம் தொடர்பாக அஞ்சலை, ஆலங்குடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, முருகேசனை கைது செய்தனர். மற்ற இருவர்களை தேடிவருகின்றனர்.