உள்ளூர் செய்திகள்

அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது.

Published On 2022-09-30 06:02 GMT   |   Update On 2022-09-30 06:02 GMT
  • அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
  • அதிர்ஷ்டவசமாக காயங்களின்றி உயிர் தப்பினர்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் இருந்து பயணிகளுடன் அரசு பஸ் ஒன்று இலுப்பூர் வந்தது கொண்டிருந்தது. போலம்பட்டி ஊரணி என்னும் இடத்தில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் செய்வதறியாது அலறினர். பின்னர் பஸ்சில் இருந்த பயணிகள் டிரைவர், கண்டக்டர் அனைவரும் அதிர்ஷ்டவசமாக காயங்களின்றி உயிர் தப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News