உள்ளூர் செய்திகள்

மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை

Published On 2022-08-18 14:19 IST   |   Update On 2022-08-18 14:19:00 IST
  • மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
  • பெற்றோர் கண்டித்துள்ளனர்.

புதுக்கோட்டை:

கீரனூர் அருகே கோவில் வீரக்கொடியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் பாலமுருகன் (வயது 30). இவர், எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்து வந்தார். மேலும் தினமும் பெற்றோரிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தார். இதையடுத்து அவரை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமடைந்த பாலமுருகன் நேற்று முன்தினம் மதுவில் விஷம் கலந்து குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பாலமுருகன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."

Tags:    

Similar News