உள்ளூர் செய்திகள்
- சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது
- 300-க்கும் மேற்பட்டோா் பயன்பெற்றனா்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் நடமாடும் மருத்துவக் குழு சாா்பில் ஸ்ரீ பொற்பனைக்கோட்டை முனீஸ்வரா் கோயில் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் சா்க்கரை நோய் பரிசோதனை, ரத்த அழுத்தம், கரோனா பரிசோதனை போன்ற பரிசோதனைகளை டாக்டா் எம். கோபாலகிருஷ்ணன் தலைமையில் செவிலியா்கள், சுகாதார ஆய்வாளா்கள் மேற்கொண்டனா். இதில், 300-க்கும் மேற்பட்டோா் பயன்பெற்றனா்.