உள்ளூர் செய்திகள்
உயர் மின் கோபுர விளக்கு எரிய வைக்க கோரிக்கை
உயர் மின் கோபுர விளக்கு எரிய வைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள அரசடிப்பட்டியில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் நிதியில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்ப–ட்டது. இதனால் அப்பகுதியில் போதிய வெளிச்சம் இருந்தா–ல் பொதுமக்களும் பெண்களும் அச்சமின்றி நடமாடி வந்தனர். இந்நிலை–யில் நீண்ட காலமாக அந்த விளக்கு எரிவதில்லை. இதனால் நான்கு ரோடுகள் சந்திக்கும் பகுதியில் இருள் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் போதிய வெளிச்சம் இன்றி அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட நிர்வாகம் பழுதடைந்த உயர் கோபுரமின்விளக்கை சீரமைக்குமாறு பொது–மக்கள் கோரிக்கை எடுத்து–ள்ளனர்.