உள்ளூர் செய்திகள்

கிணற்றில் விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்பு

Published On 2022-08-02 06:08 GMT   |   Update On 2022-08-02 06:08 GMT
  • கிணற்றில் விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்கப்பட்டார்
  • இயற்கை உபாதை கழிக்க சென்ற போது நடந்தது

புதுக்கோட்டை:

ஆலங்குடி அருகே உள்ள பாப்பான்விடுதி ஏடி காலணியை சேர்ந்தவர் சின்னம்மாள் (வயது 85). இவர், இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றார் அப்போது அதே பகுதியில் உள்ள துரைராஜ் என்பவருக்கு சொந்தமான சுமார் 20 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்து விட்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சின்னம்மாளை உயிருடன் மீட்டனர்.

Tags:    

Similar News