உள்ளூர் செய்திகள்

இந்தி திணிப்பு தமிழகத்தில் ஒரு நாளும் வெற்றி பெறாது - திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி

Published On 2022-10-12 09:02 GMT   |   Update On 2022-10-12 09:02 GMT
  • இந்தி திணிப்பு தமிழகத்தில் ஒரு நாளும் வெற்றி பெறாது என்று திருநாவுக்கரசர் எம்.பி. தெரிவித்தார்.
  • யார் வேண்டுமானாலும் தேவர் நினைவிடத்துக்கு வரலாம்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர் மற்றும் திருச்சி பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட கலெக்டர் கவிதா ராமு முன்னிலையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பிறகு திருநாவுக்கரசர் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு பிரதமர் வருவது என்பது அவருடைய முடிவு. யார் வேண்டுமானாலும் தேவர் நினைவிடத்துக்கு வரலாம்.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் எந்த அணியையும் சாராமல் நடுநிலைமையாகத்தான் உள்ளனர். பிரசாரத்துக்கு வரும் வேட்பாளர்களுக்கு ஆதரவு கொடுப்பது என்பது அந்தந்த நிர்வாகிகளின் முடிவை பொருத்தது.

மத்திய அரசு இந்தியை மீண்டும் திணிக்க முயற்சி செய்வது கண்டனத்துக்குரியது. இந்தி திணிப்பு தமிழகத்தில் ஒரு நாளும் வெற்றி பெறாது. அவ்வாறு முயற்சி செய்தால் போராட்டம் வெடிக்கக்கூடிய சூழல் ஏற்படும்.

சட்டப்பேரவையில் அ.தி.மு.க.வினருக்கு இருக்கை ஒதுக்குவது தொடர்பாக சட்டப்பேரவை தலைவர் என்ன முடிவு எடுக்க உள்ளார் என்பதை அறிய ஆவலாக உள்ளேன் என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் மாவட்ட வளர்ச்சி 

Tags:    

Similar News