உள்ளூர் செய்திகள்

பட்டதாரி பெண் மாயம்

Published On 2022-10-01 12:29 IST   |   Update On 2022-10-01 12:29:00 IST
  • பட்டதாரி பெண் மாயமானார்
  • ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்

புதுக்கோட்டை:

ஆலங்குடி பாரதிதாசன் சாலையில் வசிப்பவர் செந்தில்வேல் மகள் விஷாலி (வயது 23). இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். வீட்டில் இருந்த இவர், திடீரென் காணவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வட்டாரங்களில் தேடி பார்த்தும் விஷாலி கிடைக்கவில்லை. இதனை அடுத்து வந்த புகாரை தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து மாயமான பட்டதாரி பெண்ணை தேடிவருகிறார்.

Tags:    

Similar News