உள்ளூர் செய்திகள்

கார் மோதி பால் வியாபாரி காயம்

Published On 2022-08-07 07:00 GMT   |   Update On 2022-08-07 07:00 GMT
  • கார் மோதி பால் வியாபாரி காயம் ஏற்பட்டது
  • வியபாரம் முடித்துவிட்டு வரும் போது விபரீதம்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடவாளம் குப்பையன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் சந்திரன் (வயது 54). பால் வியாபாரியான இவர், தனது வியாபாரத்தை முடித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் கூழையான்விடுதி ஏடி-காலனி பிரிவு அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது கும்பகோணம் கொற்கை முகமது உசேன் மகன் கனி ( வயது 35) ஓட்டிவந்த கார், இவர் மீது மோதியது. இதில் சந்திரன் படுகாயம் அடைந்தார். புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து செம்பட்டிவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News