உள்ளூர் செய்திகள்

பூட்டியிருந்த வீட்டில் நகை- பணம் கொள்ளை

Published On 2022-10-09 12:00 IST   |   Update On 2022-10-09 12:00:00 IST
  • பூட்டியிருந்த வீட்டில் நகை- பணம் கொள்ளை நடந்துள்ளது
  • அழகர் கோவிலுக்கு சென்றிருந்தனர்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மச்சுவாடி டிரைவர் காலணி 3-வது தெருவை சேர்ந்தவர் பொன்னையா. மரவேலைகள் செய்து வருகிறார். இவரது மனைவி சந்திரா(வயது40).

இவர்கள் குடும்பத்துடன் மதுரை அருகே அழகர்கோவிலுக்கு வீட்டை பூட்டி விட்டு சென்று, பின்னர் இன்று திரும்பி வந்தனர்.

வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கிரில் கேட் உடைக்கப்பட்டு ே இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

உள்ளே புகுந்து பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த ஒன்றரை பவுன் தங்கநகை மற்றும் 470 கிராம் வள்ளிப் பொருட்களை திருடுபோயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சந்திரா கொடுத்த புகாரின் பேரில் கனேஷ்நகர் காவல்நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மனோகர் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றார்.

Tags:    

Similar News