- பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
- ரூ. 80 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு காவல் சரகத்திற்கு உள்பட்ட பகுதிகளில் சூதாட்டம் நடைபெறுவதாக மாவட்ட காவல்கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையொட்டி தனிப்படை போலீசார் அப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஈச்சான்விடுதி பாலம் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட புதுக்கோட்டை அடப்பனவயல் பகுதியைச் சேர்ந்த பாசித்அலி (வயது 34), அய்யனார்புரத்தைச் சேர்ந்த சந்திரதுரை (48), பெரியார் நகரைச்சேர்ந்த ரமேஷ் (34), அம்பாள்புரத்தைச்சேர்ந்த சுப்பிரமணியன் (38), தோப்புக்கொல்லை யைச்சேர்ந்த கமலநாதன்(49), சின்னப்பாநகரை சேர்ந்த சரவணன் (43), உசிலங்குளத்தை சேர்ந்த மாரிமுத்து (39) ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து 8 அலைபேசிகள், ரூ. 80 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்து வடகாடு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வடகாடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.