உள்ளூர் செய்திகள்
சட்ட விரோதமாக மது விற்ற 2 பேர் கைது
- சட்ட விரோதமாக மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்
- மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே ஆண்டிகுளம், அரசமரம் பஸ் நிறுத்தம் ஆகிய பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு மது விற்ற 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதிர் கல்லுகுண்டு கரையைசேர்ந்த கோவிந்தசாமி மகன் முருகேசன் (வயது 51), அறந்தாங்கி அருகே அத்தாணி ஆவாகுளம் கோங்குடி கிராமத்தை சேர்ந்த கருப்பையா மகன் ராஜேந்திரன் (வயது 55) என்பது தெரியவந்தது. பின்னர் அவர்களிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ததுடன் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.