உள்ளூர் செய்திகள்

சட்டவிரோதமாக மது விற்ற 2 பேர் கைது

Published On 2022-10-12 14:34 IST   |   Update On 2022-10-12 14:34:00 IST
  • சட்டவிரோதமாக மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • போலீசார் அப்பகுதில் சோதனை நடத்தினர்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்தது. தகவலின் படி, தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் சிவகுமார் மற்றும் போலீசார் அப்பகுதில் சோதனை நடத்தினர். அப்போது வெண்ணவால்குடி ரெங்கசாமி மகன் குமார் (வயது 47), கல்லுக்குண்டு கரையைசேர்ந்த கோவிந்தசாமி மகன் முருகேசன் ( 51) ஆகியோர் மது விற்பனைசெய்து கொண்டிருப்பதை பார்த்த போலீசார், அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்த 104 மது பாட்டில்களும் மற்றும் ரூபாய் 3,970 பறிமுதல் செய்து ஆலங்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆலங்குடி காவல் ஆய்வாளர் அழகம்மை வழக்கு பதிவு செய்தவிசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News