உள்ளூர் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.

நகராட்சி குப்பை கிடங்கில் தீ பொதுமக்கள் போராட்டம்

Published On 2023-04-14 07:30 GMT   |   Update On 2023-04-14 07:30 GMT
  • கடந்த 6 மாதமாக 7-வது வார்டு சுடுகாடு பகுதியில் தனியாருக்கு சொந்த மான இடத்தில் கொட்டப்பட்டு வருகின்றன.
  • குப்பைக்கு மர்ம நபர்கள் தீ வைத்து வருகின்றனர்.

தாரமங்கலம்:

தாரமங்கலம் நகராட்சியில் அன்றாடம் சேகரிக்க படும் குப்பைகள் கடந்த 6 மாதமாக 7-வது வார்டு சுடுகாடு பகுதியில் தனியாருக்கு சொந்த மான இடத்தில் கொட்டப்பட்டு வருகின்றன. சமீப காலமாக இங்கு கொட்டப்பட்டுள்ள குப்பைக்கு மர்ம நபர்கள் தீ வைத்து வருகின்றனர். இதனால் தீயில் இருந்து வெளியேறும் நச்சு புகையானது அந்த பகுதியைசேர்ந்த குடியிருப்பு முழுவதும் சூழ்ந்து கொள்வதால் மக்கள் மூச்சு திணறலால் அவதி பட்டு வந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று 100 க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் ஒன்று திரண்டு தாரமங்கலம் நங்கவள்ளி சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த நகராட்சி மன்ற தலைவர் குணசேகரன். ஆணையாளர் முஸ்தபா, காவல் ஆய்வாளர் தொல்காப்பியன் ஆகியோர் பொதுமக்களை நகராட்சிக்கு அழைத்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது அதிகாரிகள் இன்னும் 6 மாதத்தில் குப்பை கிடங்கு வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட உள்ளது என்றும், குப்பைக்கு தீ வைக்கும் மர்ம நபர்களை கண்காணிப்பு கேமரா உதவியுடன் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News