உள்ளூர் செய்திகள்

விரைவாக இணைப்பு வழங்க வேண்டும் - அனைத்து பொது தொழிலாளா் நல அமைப்பினா் கோரிக்கை

Published On 2023-02-10 07:57 GMT   |   Update On 2023-02-10 07:57 GMT
  • மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் உள்ள அலுவலா்கள் மக்களை அலைக்கழிக்கின்றனா்.
  • மின் இணைப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தாா்.

அவிநாசி :

அவிநாசியில் நடைபெற்ற மின்நுகா்வோா் குறைதீா் கூட்டத்தில் புதிதாக விண்ணப்பிக்கும் அனைவருக்கும் விரைவாக இணைப்பு வழங்க வேண்டும் என அனைத்து பொது தொழிலாளா் நல அமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து மின்நுகா்வோா் குறைதீா் கூட்டத்தில், அனைத்து பொது தொழிலாளா் நல அமைப்பின் பொதுச் செயலாளா் ஈ.பி.அ.சரவணன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் உள்ள அலுவலா்கள், இல்லாத சட்டங்களைக் கூறி மக்களை அலைக்கழிக்கின்றனா். மேலும் பாரபட்சமின்றி மின்சார வாரிய விதிகளை கடைப்பிடித்து புதிய மின் இணைப்பு வழங்க வேண்டும்.

குறிப்பாக ஒவ்வொரு பிரிவு அலுவலகத்திலும் மின் மீட்டா்கள் இருப்பு குறித்த விவரங்களை பொது மக்கள் அறியும் வகையில் குறிப்பிட்டு, புதிதாக விண்ணப்பிக்கும் அனைவருக்கும் விரைவாக மின் இணைப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தாா்.

Tags:    

Similar News