உள்ளூர் செய்திகள்

திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2023-07-26 07:34 GMT   |   Update On 2023-07-26 07:34 GMT
  • மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை யை கண்டித்து நடைபெற்றது.
  • வானூர் வட்டக் குழு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு பஸ் நிலையம் அருகே மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை யை கண்டித்தும், மணிப்பூரில் பா.ஜ.க. அரசை பதவி விலகக் கோரியும், வானூர் வட்டக் குழு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வானூர் வட்டச் செயலாளர் முருகன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முத்துக்குமரன், அறிவழகன், மாவட்ட குழு உறுப்பினர் அர்ஜுனன் ஆகியோர் கலந்துகொண்டு மணிப்பூரில் நடைபெற்ற பாலியல் கொடுமைகளை கண்டித்து கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மார்க் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News