உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே தனியார் நிறுவன சமையல்காரர் சாவு

Published On 2022-10-13 08:18 GMT   |   Update On 2022-10-13 08:18 GMT
  • இன்று காலை குளிக்க சென்ற பாபுநாத் சுரேன் கால் வழிக்கி கீழே விழுந்தார்.
  • மேல் சிகிச்சைக்காக அதே பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

கடலூர்:

கொல்கத்தா மாநிலம் புருளியாவை சேர்ந்தவர் பாபுநாத் சுரேன் (வயது 26). இவர் ரெட்டிச்சாவடியை அடுத்த பெரிய காட்டுபாளையம் தனியார் கம்பெனியில் சமையல் காரராக வேலை பார்த்து வந்தார். இன்று காலை குளிக்க சென்ற பாபுநாத் சுரேன் கால் வழிக்கி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து அங்கு இருந்தவர்கள் பாபுநாத் சுரேனை மீட்டு பெரிய காட்டுப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்தனர்‌. பின்னர் மேல் சிகிச்சைக்காக அதே பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது பாபுநாத் சுரேனை சோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனார். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News