தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டம்
- பரமத்தி வட்டார கல்வி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஒன்றிய அளவில் பணிப்பதிவேடு சரிபார்த்தல் சார்ந்து கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி வட்டார கல்வி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் ரவிக்குமார் தலைமை வகித்தர். மாவட்ட செயலாளர் சங்கர், மாநில பொருளாளர் முருக செல்வராசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இதில், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் அனுமதிக்கப்பட வேண்டும். மருத்துவ காப்பீட்டு அட்டையை அனைத்து ஆசிரியர்களுக்கும் பெற்றுத் தர வேண்டும். ஒன்றிய அளவில் பணிப்பதிவேடு சரிபார்த்தல் சார்ந்து கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.
இறுதியில், கபிலர்மலை ஒன்றிய செயலாளர் முத்துசாமி நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய மற்றும் கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.