உள்ளூர் செய்திகள்

ஓசூர் சிப்காட் பகுதியில் கொடி ஏற்றி வைத்தபோது எடுத்த படம்.

ஓசூரில் பா.ம.க. கொடியேற்று விழா

Published On 2022-07-23 15:12 IST   |   Update On 2022-07-23 15:12:00 IST
  • ஓசூரில் பா.ம.க. கொடியேற்று விழா நடைபெற்றது.
  • பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

ஓசூர்,

வன்னியர் சங்கத்தின் 43-வது ஆண்டு தொடக்கவிழாவை யொட்டி, ஓசூரில் பா.ம.க. கொடியேற்று விழா நடைபெற்றது.

விழாவையொட்டி, மேற்கு மாவட்ட பா.ம.க. வன்னியர் சங்கம் மற்றும் வன்னியகுல சத்திரிய தொழில்முனைவோர் சங்கத்தின் சார்பில் ஓசூர் முதலாவது சிப்காட், சின்ன எலசகிரி, ராஜேஸ்வரி லே-அவுட் உள்ளிட்ட 6 இடங்களில் கட்சிக் கொடி ஏற்றிவைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு மேற்கு மாவட்ட செயலாக அருண்ராஜன் தலைமை தாங்கினார். பா.ம.க.வழக்கறிஞர் சமூகநீதிப்பேரவையின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் கனல் கதிரவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மேலும் இதில் வெங்கடேஷ், உள்ளிட்ட கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News