உள்ளூர் செய்திகள்

கோவை அருகே காதலனுடன் பிளஸ்-2 மாணவி ஓட்டம்

Published On 2023-05-25 09:27 GMT   |   Update On 2023-05-25 09:27 GMT
  • காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
  • மாணவியின் பெற்ேறார் ஆனைமலை போலீசில் புகார் செய்தனர்.

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டைக்காரன் புதூரை சேர்ந்தவர் 19 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து பிளஸ்-2 தேர்வு எழுதி உள்ளார்.

இந்தநிலையில் மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக பழனியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

பின்னர் மாணவியை அவரது பெற்றோர் குரும்பபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டில் விட்டனர். சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாணவி தனது காதலனுடன் ஓட்டம் பிடித்தார். அவரை அவரது உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனால் எந்த பலனும் இல்லை.

இது குறித்து மாணவியின் பெற்றோர் மாயமான தங்களது மகளை கண்டுபிடித்து தரும்படி ஆனைமலை போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்டாகிராம் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவியை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News