உள்ளூர் செய்திகள்
களக்காட்டில் பிளஸ்-2 மாணவர் தற்கொலை
- களக்காட்டில் உள்ள ஒரு பள்ளியில் மைக்கேல் ஜெரோன் பிளஸ்-2 படித்து வந்தார்.
- மைக்கேல் ஜெரோன் வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
களக்காடு:
களக்காடு, சரோஜினி புரத்தை சேர்ந்தவர் அந்தோணி சவரிமுத்து. இவர் கேரளாவில் தங்கியிருந்து பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சந்தனபிரபா. இவர்களது மகன் மைக்கேல் ஜெரோன் (வயது18). இவர் களக்காட்டில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்நிலையில் இவர் சிங்கப்பூர் செல்ல திட்டமிட்டார். இதற்கான பயிற்சி வகுப்பில் சேர பணம் இல்லாததால் மன விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே நேற்று மதியம் மைக்கேல் ஜெரோன் வீட்டில் உள்ள அறையில் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்ய ப்பட்டது. இன்ஸ்பெக்டர் பச்ச மால், சப்-இன்ஸ்பெக்டர் ரெங்க சாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.