உள்ளூர் செய்திகள்
- பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
- கோவிலில் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்
பெரம்பலூர்:
சேலம் மாவட்டம் லத்துவாடி கங்கவல்லி தாலுகா கடைவீதி தெருவை சேர்ந்த பெரியசாமி மகன் பாலமுருகன் (வயது 38). இவர் ரஞ்சன்குடி பிரிவு ரோட்டில் நின்றிருப்பதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் அவர் மீது சந்தேகப்பட்டு அவரது பையை சோதனை செய்ததில் புத்துமாரியம்மன் கோவிலில் இருந்த இரண்டு குத்து விளக்குகள் அவரது கைப்பையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து மங்களமேடு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து வந்த மங்களமேடு காவல்துறையினர் பாலமுருகனை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு ெசய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.