உள்ளூர் செய்திகள்

கோவில் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு

Published On 2023-01-23 13:19 IST   |   Update On 2023-01-23 13:19:00 IST
  • மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
  • கோவில் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு நடந்துள்ளது

பெரம்பலூர்:

அகரம்சீகூர் அடுத்து பெரம்பலூர் மாவட்டம் தேவையூரில் அருள்மிகு மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திட்டக்குடி தாலுக்கா ஆதமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ரங்கசாமி மகன் மருதமுத்து ( வயது 50) இவர் இந்த கோவிலில் பூசாரியாக செயல்பட்டு வருகிறார்.இந்நிலையில் இவர் வழக்கம் போல் கோவில் நடைகளை சாத்திவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் காலையில் கோவிலை திறக்க வந்த போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர் உள்ளே சென்று பார்க்கும் பொழுது கோவிலின் உள்ளே இருந்த உண்டியலை காணவில்லை.இதனையடுத்து மங்களமேடு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து வந்த மங்களமேடு காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News