உள்ளூர் செய்திகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் பலத்த மழை

Published On 2022-12-05 14:28 IST   |   Update On 2022-12-05 14:28:00 IST
  • பெரம்பலூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது.
  • விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே வட கிழக்கு பருவமழை பெய்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் வெயில் வாட்டி வந்தது. இந்த சூழ்நிலையில் நேற்று பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் குறைவாக காணப்பட்டது. மேலும் நேற்று அதிகாலை முதல் இரவு வரை அவ்வவ்போது விட்டு, விட்டு பலத்த மழை பெய்தது. மதியம் 2.30 மணியளவில் சுமார் அரை மணி நேரம் பெய்த மழை வெளுத்து வாங்கியது. இதனால் ஏரி, குளங்களுக்கு மீண்டும் தண்ணீர் வர தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். 

Tags:    

Similar News