உள்ளூர் செய்திகள்

மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-12-02 14:57 IST   |   Update On 2022-12-02 14:57:00 IST
  • மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  • கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது

பெரம்பலூர்

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் மண்டல செயலாளர் அகஸ்டின் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மின் ஊழியர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தமிழ்நாடு மின்வாரியம் உடனே தொடங்க வேண்டும். மின் வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். மின்வாரியத்தில் உள்ள அவுட் சோர்சிங் முறையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த மாதம் (ஜனவரி) 5-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட தயங்க மாட்டோம் என்று அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News