சிறுவாச்சூரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி
- சிறுவாச்சூரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடந்தது
- துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது
பெரம்பலூர்
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில் கிராமம் தோறும் கிராமிய திருவிழா மாவட்ட அளவிலான எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இதன்படி சிறுவாச்சூரில் நடந்த கிராமிய திருவிழாவிற்கு ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். துணை தலைவர் சுகிதா முன்னிலை வகித்தார். மாவட்ட திட்ட மேலாளர் சுமதி எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து விரிவாக பேசினார். பின்னர் ஓசை கலைக்குழுவினரின் எச்ஐவி எய்ட்ஸ் விழிப்புணர்வு பாடல்கள் மற்றும் கரகாட்ட கலை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் பொதுமக்களிடையே எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
நிகழ்வில் அம்மாபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆலோசகர் பத்மாவதி , காசநோய் பிரிவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அழகேசன், சிறுவாச்சூர் அரசு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் (பொ) ,வட்டார சுகாதார செவிலியர் மல்லிகா, கிராம சுகாதார செவிலியர் சமணஸ் மேரி, சுகாதார ஆய்வாளர் அசோக் குமார் மற்றும் சிறுவாச்சூர் அரசு பள்ளி மாணவ, மாணவியர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிருஷ்ணாபுரம் ஆலோசகர் பழனிவேல்ராஜா நன்றி கூறினார்.