உள்ளூர் செய்திகள்

வேப்பூர் பேருந்து நிலையத்தில் அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்

Published On 2022-12-15 09:57 GMT   |   Update On 2022-12-15 09:57 GMT
  • வேப்பூர் பேருந்து நிலையத்தில் அ.தி.மு.க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
  • தி.மு.க. அரசை கண்டித்து நடைபெற்றது

பெரம்பலூர்:

அகரம்சீகூர் அடுத்துள்ள பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியப் பேருந்து நிலையத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆசியுடன் எதிர்க்கட்சி தலைவரும், முன்னால் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிச்சாமி யின் ஆணைக்கிணங்க வேப்பூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் செல்வமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு, பால் விலை உயர்வு, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளிட்ட கோரிக்கள் மக்களை வாட்டி வதைக்கும் விடியா திமுக அரசை கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் வேப்பூர் பேருந்து நிலையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சந்திரகாசி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் முத்தமிழ் செல்வன், ஒன்றிய கவுன்சிலர் இளங்கோவன், திருமாந்துறை கிளைகழக உறுப்பினர் சிலம்பரசன் உட்பட தொண்டர்கள் மற்றும் உறுப்பினர்கள் 500 -க்கும் மேற்பட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News