உள்ளூர் செய்திகள்

திருட்டுதனமான மது விற்பனையை தடுக்க ரோந்து: போலீசாரை பணி செய்ய விடாமல் மிரட்டிய 3 பேர் கைது- மது விற்ற மேலும் 8 பேர் சிக்கினர்

Published On 2023-05-02 09:19 GMT   |   Update On 2023-05-02 09:19 GMT
  • கலை சங்கரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
  • திருட்டுதனமாக மது விற்ற 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை:

மே தினத்தையொட்டி நேற்று டாஸ்மாக் கடைகள் நேற்று அடைக்கப்பட்டிருந்தது.

போலீசாருக்கு மிரட்டல்

இதனால் நெல்லை மாநகர பகுதியில், திருட்டுத்தனமாக மது விற்கப்படுவதை தடுக்க போலீசார் தீவிர ரோந்து சென்றனர். பாளை வண்டிப்பேட்டை பகுதியில் நேற்று இன்ஸ்பெக்டர் வாசிவம் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.

அப்போது தச்சநல்லூரை சேர்ந்த கலைசங்கர் (வயது22) என்பவர் சட்டவிரோதமாக அதிக விலைக்கு மது விற்பனை செய்து கொண்டி ருந்ததாக கூறப்படுகிறது. அவரை விசாரிக்க சென்ற போலீசாரை பணி செய்யவிடாமல் மிரட்டி உள்ளார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கலை சங்கரை கைது செய்து அவரிட மிருந்து 59 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

மேலப்பாளையம்

இதேபோல மேலப்பாளையம் அருகே விலங்குடையார் சாஸ்தா கோவில் அருகில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.

அப்போது கருங்குளத்தை சேர்ந்த ஈஸ்வரன் (25) என்பவர் சட்டவிரோதமாக அதிக விலைக்கு மது விற்பனை செய்து கொண்டி ருந்த போது விசாரிக்க சென்ற போலீசாரை பணி செய்ய விடாமல் மிரட்டியதாக வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 175 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தச்சநல்லூர்

தச்சநல்லூர் மதுரை ரோடு அருகில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் முத்து லட்சுமி மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது தாழையத்தை சேர்ந்த சிவகுமார் (38) என்பவர் சட்டவிரோதமாக அதிக விலைக்கு மது விற்பனை செய்து கொண்டிருந்தார்.

அப்போது விசாரிக்க சென்ற போலீசாரை பணி செய்ய விடாமல் மிரட்டியதாக வழக்குப்பதிவு செய்து, சிவக்குமாரை கைது செய்தனர். அவரிடமிருந்து 336 மது பாட்டி ல்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

இதே போல பாளை மணிக்கூண்டு பகுதியில் திருட்டுதனமாக மது விற்றதாக கள்ளத்தியான் (50), மேலப்பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்ற பாப்பாக்குடியை சேர்ந்த கண்ணன் (54), சீவலப்பேரியை சேர்ந்த கண்ணன் (43), கீழ முன்னீர்பள்ளத்தை சேர்ந்த நாராயணன் (44), புதிய பஸ் நிலையம் பகுதியில் மது விற்றதாக தாழையூத்தை சேர்ந்த செல்வம் (29), பாளையை சேர்ந்த குலசேகரன் (38), ராகுல் (24), பேட்டை பகுதியில் திருட்டுதனமாக மது விற்றதாக தங்கபெருமாள் (44) ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 177 மது பாட்டில்கள் மற்றும் ரூ. 4,850 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News