ராஜா எம்.எல்.ஏ.
சங்கரன்கோவிலில் 25-ந் தேதி மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க பொதுக்கூட்டம் - ராஜா எம்.எல்.ஏ. அழைப்பு
- சங்கரன்கோவிலில் மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் 25-ந் தேதி சங்கரன்கோவில் முப்புடாதி அம்மன் கோவில் முன்பு உள்ள கலைஞர் திடலில் வைத்து நடைபெறுகிறது.
- இதில் டாக்டர் கனிமொழி, சோமு எம்.பி. மற்றும் தூத்துக்குடி இருதயராஜ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகின்றனர்.
சங்கரன்கோவில்:
தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவிலில் வருகிற 25-ந் தமிழ் மொழிக்காக அரும்பாடுபட்ட மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கைளில் கூறியிருப்பதாவது, முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க சங்கரன்கோவிலில் மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் 25-ந் தேதி சங்கரன்கோவில் முப்புடாதி அம்மன் கோவில் முன்பு உள்ள கலைஞர் திடலில் வைத்து நடைபெறுகிறது. இதில் டாக்டர் கனிமொழி, சோமு எம்.பி. மற்றும் தூத்துக்குடி இருதயராஜ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகின்றனர். இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு மொழிப்போர் தியாகிகள் தியாகத்தை போற்றுவோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.