உள்ளூர் செய்திகள்

டி.ஐ.ஜி.யை சந்திக்க திரண்ட பொதுமக்கள்

ஓமலூர் டி.எஸ்.பி. அலுவலகத்தில்டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி ஆய்வு

Published On 2023-03-01 14:55 IST   |   Update On 2023-03-01 14:55:00 IST
  • சேலம் மண்டல டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி ஆய்வு செய்தார்.
  • தொடர்ந்து அவர் ஆன்லைன் மூலம் போலீஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

காடையாம்பட்டி:

சேலம் மாவட்டம் ஓமலூர் காவல் துறை டி.எஸ்.பி. அலுவலகத்திற்கு சேலம் மண்டல டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் ஆன்லைன் மூலம் போலீஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

இந்த நிலையில் பச்சனம்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மனு கொடுப்பதற்காக ஓமலூர் டி.எஸ்.பி அலுவலகத்தில் குவிந்து காத்திருந்தனர். அப்போது முன்னதாக சென்ற சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாரிடம் மனு கொடுக்க முயன்றனர். ஆனால், அவர் மக்களிடம் மனுக்களை வாங்காமல் சென்றதால், பொதுமக்கள் அனைவரும் அங்குமிங்கும் சுற்றி அலைந்தனர்.

இதனிடையே ஆன்லைன் கலந்துரையாடல் முடித்து வெளியே வந்த டி.ஐ.ஜி ராஜேஸ்வரி காரில் ஏறி புறப்பட்டார். அப்போது அங்கு கூடிநின்ற இளைஞர்களை அழைத்து, அவர்களிடம் இருந்த மனுக்களை பெற்றுகொண்டார்.

தொடர்ந்து இந்த புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு ஓமலூர் டி.எஸ்.பி சங்கீதாவிற்கு உத்தரவிட்டார்.

அந்த புகார் மனுவில் பச்சனம்பட்டியை சேர்ந்த திமுக நிர்வாகி ஒருவர் அரசு சார்பில் செய்யப்படும் எந்த ஒரு திட்டப்பணிகளையும் செய்ய விடாமல் தடுக்கிறார். மேலும், அக்கம் பக்கம் வசிக்கும் மக்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுப்பதாகவும் அதனால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

Tags:    

Similar News