கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர்
- தற்கொலையா? போலீசார் விசாரணை
- 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்தார்.
கடலூர்:
கடலூரில் மஞ்சக்குப்ப த்தில் மைதானம் இருந்து வருகின்றது. இங்கு தினந்தோ றும் 24 மணி நேரமும் பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். மேலும் மாலை நேரங்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான நபர்கள் மைதானத்தில் அமர்ந்து பேசிவிட்டு செல்வார்கள். இந்த நிலையில் இன்று காலை மஞ்சக்குப்பம் மைதானத்தில் உள்ள மேடையில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்தார்.
இதனை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக இறந்த முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? தூக்கு மாட்டி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூரில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மஞ்சக்குப்பம் மைதானத்தில் முதியோர் தூக்குபோட்டு இறந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.