உள்ளூர் செய்திகள்

புத்தாண்டை முன்னிட்டு பவானி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்த காட்சி.


புளியங்குடி பவானி அம்மன் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை

Published On 2023-01-02 07:55 GMT   |   Update On 2023-01-02 07:55 GMT
  • புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் உள்ள முப்பெரும் தேவி பவானி அம்மன் கோவில் அருள்வாக்கிற்கு பிரசித்தி பெற்றது.
  • புத்தாண்டு சிறப்புகள் குறித்து பக்தர்களுக்கு குருநாதர் சக்தியம்மா ஆன்மீக சொற்பொழிவாற்றினார்.

புளியங்குடி:

தென்காசி மாவட்டம் புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் உள்ள அருள்வாக்கிற்கு பிரசித்தி பெற்ற முப்பெரும் தேவி பவானி அம்மன் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இங்குள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாக கன்னியம்மன், நாகம்மன் ஆகிய தெய்வங்களுக்கு குங்குமம், மஞ்சள், தேன், சந்தனம், இளநீர், பால், தயிர், நறுமண பொருட்கள் உள்பட 18 வகை அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

புத்தாண்டு சிறப்புகள் குறித்து பக்தர்களுக்கு குருநாதர் சக்தியம்மா ஆன்மீக சொற்பொழிவாற்றினார். தொடர்ந்து சிறப்பு அருள் வாக்கு மற்றும் மதியம் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News