உள்ளூர் செய்திகள்

கோவையில் இருந்து வியட்நாமுக்கு புதிய விமான சேவை தொடக்கம்

Published On 2022-10-01 10:47 GMT   |   Update On 2022-10-01 10:47 GMT
  • ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்களும், சிங்கப்பூருக்கு வாரத்தில் அனைத்து நாட்களும் விமானம் இயக்கப்படுகிறது.
  • கோவை மட்டுமின்றி சுற்றுப்புற மாவட்டங்களை சேர்ந்த பயணிகளும் பயனடைவார்கள்.

கோவை

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் மற்றும் ஷார்ஜாவுக்கு மட்டுமே தற்போது விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.

ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்களும், சிங்கப்பூருக்கு வாரத்தில் அனைத்து நாட்களும் விமானம் இயக்கப்படுகிறது.

இந்நிலையில், கோவையில் இருந்து வியட்நாம் நாட்டின் ஹோசிமின் நகருக்கு தனியார் நிறுவனம் விமான சேவை தொடங்கியுள்ளது.

சிங்கப்பூருக்கு தினமும் இரவு 8.55 மணிக்கு புறப்படும் விமானம் சிங்கப்பூர் சென்றவுடன், அங்கிருந்து வியட்நாமுக்கு புறப்பட்டு செல்லும்.மறுதினம் வியட்நாமில் இருந்து புறப்பட்டு சிங்கப்பூர் வந்தடைந்து, அங்கிருந்து. கோவைக்கு இரவு 7.55 மணிக்கு வந்தடையும்.

இதனால் கோவை மட்டுமின்றி சுற்றுப்புற மாவட்டங்களை சேர்ந்த பயணிகளும் பயனடைவார்கள்.

இதேபோல் கோவையில் இருந்து துபாய்,கோலாலம்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கும் நேரடி விமான சேவை தொடங்க வேண்டும். இதன்மூலம் சுற்றுலா செல்வோரும், தொழில்துறையினரும் பயன்பெறுவார்கள் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News