டாக்டர் ரேவதி.
நெல்லை அரசு மருத்துவமனை புதிய டீன் பொறுப்பேற்பு
- டாக்டர் ரவிச்சந்திரனின் பதவி காலம் கடந்த ஏப்ரல் மாதத்துடன் முடிவடைந்துவிட்டது.
- டாக்டர் ரேவதி ஏற்கனவே நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் துணை முதல்வராக பதவி வகித்தவர்.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருது நகர் உள்ளிட்ட தென் மாவட்ட ங்களில் நோயாளி கள் அதிக அளவில் வந்து செல்லும் மருத்துவமனையாக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை திகழ்கிறது.
புதிய டீன் பொறுப்பேற்பு
இதன் அருகே தற்போது பல்நோக்கு மருத்துவமனை தனி வளாகத்தில் செயல்படுகிறது. நெல்லை அரசு மருத்துவமனையில் தினமும் சராசரியாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்நோ யாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தவிர ஆயிரக்கணக்கா னோர் வெளி நோயாளிகளாக வந்து செல்கின்றனர்.
இந்த மருத்துவமனையின் டீனாக பணியாற்றி வந்த டாக்டர் ரவிச்சந்திரனின் பதவி காலம் கடந்த ஏப்ரல் மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. இதையடுத்து துணை முதல்வரான டாக்டர் சுரேஷ் பொறுப்பு முதல்வ ராக பணிகளை கவனித்து வருகிறார்.
இந்நி லையில் சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவமனை டீன் ஆக பணியா ற்றிய டாக்டர் ரேவதி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி டீனாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து இன்று காலை அவர் நெல்லை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் டீனாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் ஏற்கனவே நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் துணை முதல்வராக பதவி வகித்தவர். பின்னர் பதவி உயர்வு பெற்று தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி டீனாக பணியா ற்றினார். அங்கிருந்து சிவகங்கைக்கு மாற்றப்பட்ட அவர் தற்போது நெல்லைக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.