கிழக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன் பேசிய காட்சி.
பாளையில் நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்
- நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
- மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் மற்றும் கொடியேற்றி கொண்டாடுவது என்பன குறித்து விவாதிக்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் பாளையில் உள்ள ஒரு மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
ஆவுடையப்பன்
கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் கிரகாம்பெல் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் தமயந்தி, நம்பி, மைக்கேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட பொருளாளர் ஜார்ஜ் கோசல் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
நலத்திட்ட உதவிகள்
இந்த கூட்டத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள், புதிய வாக்காளர்களை சேர்த்தல், தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அமோக வெற்றி பெற செய்தல், மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் மற்றும் கொடியேற்றி கொண்டாடுவது என்பன குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆ.பிரபாகரன், பிரபாகர பாண்டியன், சித்திக், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், நிர்வாகி கணேஷ்குமார் ஆதித்தன், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், ஒன்றிய செயலாளர்கள் கே.எஸ். தங்கபாண்டியன், பரணி சேகர், ஜோசப் பெல்சி, முத்துப்பாண்டி என்ற பிரபு, பி.சி.ராஜன், பேரூராட்சி சேர்மன் சேவியர் செல்வராஜா, மாவட்ட கவுன்சிலர் கனகராஜ், கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி துணை சேர்மன் இசக்கி பாண்டியன் மாவட்ட வக்கீல் அணி செல்வ சூடாமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.