உள்ளூர் செய்திகள்

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மார்கண்டேயன் எம்.எல்.ஏ. பரிசு வழங்கிய போது எடுத்த படம்.


விளாத்திகுளம் அருகே அரசு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மார்கண்டேயன் எம்.எல்.ஏ. வழங்கினார்

Published On 2022-08-11 09:26 GMT   |   Update On 2022-08-11 09:29 GMT
  • விளாத்திகுளம் அருகே உள்ள பேரிலோவன்பட்டியில் உள்ள நல்லழகு நாடார் மேல்நிலைப் பள்ளியில் அரசு பொது தேர்வில் வெற்றி பெற்ற முதல் மூன்று மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவில் மார்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு சிறப்புரையாற்றி பரிசுகள் வழங்கினார்.
  • அரசு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளையும் மாணவ-மாணவிகளை வெற்றி பெறச் செய்ய உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

விளாத்திகுளம்:

விளாத்திகுளம் அருகே உள்ள பேரிலோவன்பட்டியில் உள்ள நல்லழகு நாடார் மேல்நிலைப் பள்ளியில் அரசு பொது தேர்வில் வெற்றி பெற்ற முதல் மூன்று மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவில் மார்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு சிறப்புரையாற்றி பரிசுகள் வழங்கினார்.

மேலும் அரசு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளையும் மாணவ-மாணவிகளை வெற்றி பெறச் செய்ய உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பள்ளியின் தலைமையாசிரியர் பன்னீர்செல்வம், வழக்கறிஞர் ரெபேக்கா அனிட்டா மார்கண்டேயன், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசி விஸ்வநாதன், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் அய்யன்ராஜ், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் வேலுச்சாமி, மாவட்ட கவுன்சிலர் நடராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், சமூகவலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர், உட்பட கிளைச் செயலாளர்கள் ஆசிரிய-ஆசிரியைகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News