உள்ளூர் செய்திகள்
திண்டிவனம் அருகே ெரயிலில் அடிபட்டு கூலித்தொழிலாளி பலி
- பிளாஸ்டிக் பொருள்களை எடுப்பதற்காக எட்டியான் ெரயில் நிலையம் வந்தார்.
- மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்ற வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் இவர் மீது மோதியது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கிடங்கல்-2 பகுதியை சேர்ந்தவர் எட்டியான் (வயது 65). கூலித்தொழி லாளி. இவர் தினமும் திண்டிவனம் ெரயில்வே நிலை யத்தில் கிடக்கும் பிளாஸ்டிக் பொருள்களை எடுத்து விற்று வந்தார்.
அதேபோன்று இன்றும் பிளாஸ்டிக் பொருள்களை எடுப்பதற்காக எட்டியான் ெரயில் நிலையம் வந்தார். அப்போது மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்ற வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் இவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே எட்டியான் உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த ெரயில்வே போலீசார் எட்டியான் உடலை மீட்டு பிேரத பரிசோதனைக்காக திண்டி வனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.