உள்ளூர் செய்திகள்

திருக்கோவிலூர் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது

Published On 2022-08-09 06:20 GMT   |   Update On 2022-08-09 06:20 GMT
  • திருக்கோவிலூர் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • அவர்களிடம் இருந்து 350 கிராம் கஞ்சா, பைக், செல்போனை பறிமுதல் செய்தனர்.

கள்ளக்குறிச்சி:

திருக்கோவிலூர் அருகே வீரபாண்டி பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வீரபாண்டி அரசு பள்ளி அருகே கஞ்சா விற்ற சென்னை துரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெகன்(வயது23), வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த முகமது அஜிம்(16 ) ஆகியோரை கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து 350 கிராம் கஞ்சா, பைக், செல்போனை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News