உள்ளூர் செய்திகள்

மத்திகிரி அருகே குடிப்பழக்கத்தால் வாலிபர் தற்கொலை

Published On 2022-07-20 14:36 IST   |   Update On 2022-07-20 14:36:00 IST
  • வேலைக்கு செல்லாமல் குடிப்பதற்கு வீட்டில் பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்.
  • மனமுடைந்த லட்சுமிநாராயணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி போலீஸ் சரகம் பொம்மாண்டபள்ளி பகுதியை சேர்ந்தவர் லட்சுமிநாராயணன் (வயது 18). சிறுவயதிலேயே இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டார்.

இதனால் வேலைவெட்டி எதற்கும் செல்லாமல் குடிப்பதற்கு வீட்டில் பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்.

இது குறித்து அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதில் மனமுடைந்த லட்சுமிநாராயணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து மத்திகிரி போலீசார் வழக்கு பதிந்து லட்சுமிநாராயணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News