உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே வெவ்வேறு சம்பவங்களில் தூக்கில் தொங்கி 2 பேர் தற்கொலை

Published On 2022-07-17 14:04 IST   |   Update On 2022-07-17 14:04:00 IST
  • கேசவமூர்த்தி என்ற கூலித்தொழிலாளி குடும்பத்தகராறில் மனமுடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • இது குறித்து தளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அருகே யுள்ள எஸ்.குருப்பட்டியை சேர்ந்தவர் ரவிரெட்டி (வயது 32). விவசாயி. கடன் தொல்லையால் அவதிப்பட்டுவந்த ரவிரெட்டி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல சூளகிரி அருகே சென்னப்பள்ளியை சேர்ந்த கேசவமூர்த்தி என்ற கூலித்தொழிலாளி குடும்பத்தகராறில் மனமுடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சமத்துவம் குறித்து சூளகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News