உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே பணம் வைத்து சூதாடிய கும்பல் கைது

Published On 2022-07-23 14:58 IST   |   Update On 2022-07-23 14:58:00 IST
  • கிருஷ்ணகிரியில் சூதாட்ட கும்பல் சிக்கியது.
  • பணம்,மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி போலீசார் சோலேபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் தோப்பு ஒன்றில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டு இருந்தது.

இைதயடுத்து அந்த கும்பலை போலீசார் வளைத்து பிடித்தனர். சோலேபுரம் பகுதியை சேர்ந்த ஆரோக்கியசாமி (வயது 38), பால்ராஜ் (35) மற்றும் மணிவேல் (40), செல்லப்பா (53), திம்மராஜ் (40), முரளி (29), ஸ்ரீதர் (32) மற்றும் தேவகானப்பள்ளி பகுதியை சேர்ந்த நாகராஜ் (53), முரளி மோகன் (30) ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ. 12 ஆயிரம் பணம் 3 மோட்டார் சைக்கிள்கள், 54 சீட்டுக்கட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இவர்கள் மீது தளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News