உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே மனைவி கோவித்து சென்றதால் தூக்குப்போட்டு கணவன் சாவு

Published On 2022-07-19 16:00 IST   |   Update On 2022-07-19 16:00:00 IST
  • மனைவி கோவித்துக்கொண்டு சென்றதால் கணவர் தற்கொலை செய்துகொண்டார்.
  • அவர் தூக்கில் தொங்கி உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை போலீஸ் சரகம் எல்லையோர பகுதியை சேர்ந்தவர் ரிஸ்வான் (வயது 47). இவருக்கும் இவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும்.

இதேபோல கடந்த 17-ந்தே தியும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ரிஸ்வானின் மனைவி கோவித்துக்கொண்டு அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதில் மனமுடைந்த ரிஸ்வான் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அக்கம்பக்கத்தினர் இது குறித்து தந்த தகவலின் பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார் ரிஸ்வானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News