உள்ளூர் செய்திகள்

தாரமங்கலம் அருகே கயிறு வியாபாரத்துக்கு சென்றவர் மாயம்

Published On 2023-05-23 14:30 IST   |   Update On 2023-05-23 14:30:00 IST
  • கருக்கல்வாடி கிராமம் கே.ஆர்.தோப்பூர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 55). இவர் உள்ளூர் மற்றும் வெளி ஊர்களுக்கு சென்று கயிறு விற்பனை செய்து வருகிறார்.
  • கடந்த மாதம் 3-ந் தேதி கயிறு விற்று வருவதாக கூறி வெளியே சென்றவர் அதன்பிறகு வீடு திரும்ப வில்லை.

தாரமங்கலம்:

தாரமங்கலம் அருகிலுள்ள கருக்கல்வாடி கிராமம் கே.ஆர்.தோப்பூர் பகு தியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 55). இவர் உள்ளூர் மற்றும் வெளி ஊர்களுக்கு சென்று கயிறு விற்பனை செய்து வருகிறார்.

இவர் கடந்த மாதம் 3-ந் தேதி கயிறு விற்று வருவதாக கூறி வெளியே சென்றவர் அதன்பிறகு வீடு திரும்ப வில்லை. அக்கம்பக்கத்தில் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதுபற்றி அவரது மனைவி விமலா தார மங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News