உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே மருமகளை தாக்கி கொலைமிரட்டல் விடுத்த மாமீயார்

Published On 2022-12-29 14:17 IST   |   Update On 2022-12-29 14:17:00 IST

கடலூர்:

கடலூர் அருகே கொடுக்கன் பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ். இவரது மனைவி நந்தினி (வயது 23). சம்பவத்தன்று நந்தினியை இவரது மாமியார் அஞ்சம்மாள் மற்றும் உறவினர்கள் திடீரென்று வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து நந்தினி நடுவீரப்பட்டு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் அஞ்சம்மாள் (55), வாசுகி, திருமகள் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News